districts

img

பெரம்பலூர் 8-ஆவது புத்தகத் திருவிழா  மதுக்கூர் ராமலிங்கம் பங்கேற்பு

பெரம்பலூர், மார்ச் 30-  பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் பெரம்பலூர் 8-ஆவது புத்தகத் திருவிழா வின் 5-ஆவது நாள் நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது.   நிகழ்வில் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், ‘‘புத்தகம் எனும் மோதிரம்’’ என்ற  தலைப்பில்  பேசுகையில், ‘‘நாம் வாழ்வது ஒரே முறைதான் அந்த ஒரே வாழ்க்கையை உணர்ந்து கொள்ள உதவி செய்வது புத்தகங்கள் மட்டுமே’’ என தெரிவித்தார்.  பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர், எழுத்தாளர்  இரா.முத்துநாகு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஆதவ் பப்ளிக் ஸ்கூல் தாளாளர் கி.ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், 10 கவிஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர். 

;